10வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடக்கம்- விழாக் கோலம் பூண்ட சிகாகோ!

தமிழின் பெருமை உணர்த்தும் வகையிலான உலகத் தமிழ் மாநாடு, அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி பல்வேறு நாடுகளில் இருந்து தமிழர்கள், சிகாகோ நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • உலகத் தமிழ் மாநாடு ஜூலை 4 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது
  • இதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்கம், சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து 10வது உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. அமெரிக்காவின் சிகாகோ நகரில் 4 நாட்கள் நடைபெறும் நிகழ்வாக, இன்று தொடங்குகிறது.

இந்த மாநாட்டிற்கான மைக்கரு “கீழடி நம் தாய் மடி” என்பதாகும். மதுரையை அடுத்த கீழடியில் ஏராளமான தொல்பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன. அவை பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை விளக்குகின்றன. கீழடியில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழர்களின் வாழ்க்கையை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் சிகாகோவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு, கீழடியை மையமாக கொண்டு தொடங்கப்படுகிறது. மேலும் தமிழறிஞர் ஜி.யு.போப் அவர்களின் 200வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது.

2 Reviews

rHWUYTJ
1

first time you take cialis

cialis professional And then they destroyed it for us, said Addair

undesty
1

cialis gene

cialis online purchase have shown that 89 Zr trastuzumab can be detected in BM at the same median concentration than in bone metastasis of patients with HER2 MBC

Write a Review

admin

Read Previous

தமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை – யார் இந்த இளவேனில் வாலறிவன் ?

Read Next

யோகா பாட்டி கோவை நானம்மாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *